Skip to main content

வேத வினாடி வினா - 2 ( 26.03.20202)

தலைப்பு : உணவு


பகுதி : முழு வேதாகமம்

1. யோவான் ஸ்நானகனின் உணவு ______________

2. ஓய்வு நாளில் சீடர்கள் சாப்பிட்டது _________________

3. எலியாவுக்கு காகம்  கொடுத்த உணவு ________________

4. 3 புருஷர்களுக்கு ஆபிரகாம் கொடுத்த உணவு ____________________

5. அபிகாயில் தாவீதுக்கும், அவனோடிருந்தவருக்கு ம் எடுத்துச் சென்ற உணவு ____________________

6. சாரிபாத் ஊர் விதவை எலியாவுக்கு அளித்த உணவு _______________

7. தாவீது இராணுவத்திலுள்ள சகோதரர்களுக்கு எடுத்துச் சென்ற உணவு _______________

8. யாக்கோபு ஈசாக்குக்கு கொடுத்த உணவு _______________

9. இராவிருந்தில் அளிக்கப்பட்ட உணவு ______________

10. தானியேளும், நண்பர்களும் சாப்பிட்ட உணவு ________________

11. சிம்சோன் சாப்பிட்டது ___________________

12. யோனத்தான் கோலால் குத்தி சாப்பிட்டது __________________

13. விடாய்த்திருந்த இஸ்ரவேலர் கொள்ளையில் மேல் பாய்ந்து புசித்தது ________________

14. ஆசாரியனான அகிமலேக்கு தாவீதுக்கு சாப்பிட கொடுத்தது ____________________

15. இயேசு உயிரோடு எழுந்த பின்பு சீடர்களோடு சாப்பிட்டது  ________________

16. 5000 பேர் சாப்பிட்டது _______________

17. 4000 பேர் சாப்பிட்டது __________________

18. பிள்ளைகள் சாப்பிட்டது _____________

19. நாய்க்குட்டிகள் சாப்பிடுவது _______________

20. பன்றித் தின்பது _______________

21. இயேசுவின் போஜனம் ________________

22. ஆதாமும் ஏவாளும் சாப்பிட்டது __________________

23. பெத்தேலிலே குடியிருந்த தீர்க்கதரிசி வீட்டிலே தேவ மனுஷன் புசித்தது ________________

24. இஸ்ரவேலர் பஸ்காவின்போது சாப்பிட்டது ___________________

25. இஸ்ரவேலர் பாலைவனத்தில் சாப்பிட்டது ____________________

26. இஸ்ரவேலர் பாலைவனத்தில் நினைத்த எகிப்தின் சாப்பாடு _________

27. வனாந்தரத்தில் சூரைச் செடியின் கீழ் படுத்து தூங்கிய எலியாவிற்கு தூதன் கொடுத்த சாப்பாடு ______________

28. சீரியா தேசத்தில் இராணுவ வீரர்களுக்கு எலிசாவால் சொல்லப்பட்ட உணவு _______________

29. கர்த்தருடைய வார்த்தையின்படியே சீரியரின் பாளையத்தில் விற்கப்பட்ட உணவு ____________

30. கில்காலிலே பஞ்சம் ஏற்பட்ட போது தீர்க்கதரிசிகள் சாப்பிட்ட உணவு _______________

31. தாவீதும் அவனோடு இருந்தவர்களும் ஒரு எகிப்தியருக்கு கொடுத்த உணவு ___________________

32. ஏசா சேஷ்டபுத்திரபாகத்தை விற்றுப்போட்டு சாப்பிட்ட உணவு __________

33. ஏதோம் என பெயர் வர காரணமாயிருந்த உணவு ______________

34. அஞ்ஞானம் பார்க்கும் ஸ்தீரி சவுலுக்கும் அவன் ஊழியக்காரருக்கும் கொடுத்த உணவு __________________

35. மெல்கிசேதேக்கு ஆபிரகாமுக்கு கொடுத்த உணவு _________________

__________________________________________________________________________________

விடைகள்

1. வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் - மத்தேயு 3 : 4

2. கொய்த கதிர்கள்  - மத்தேயு 12 : 1

3. இறைச்சியும் அப்பமும் - I இராஜாக்கள் 17 : 6

4. வெண்ணெய், பால், சமைத்த கன்று - ஆதியாகமம் 18 : 8

5. இருநூறு அப்பங்கள், இரண்டு துருத்தி திராட்சைரசம், சமைக்கப்பட்ட 5 ஆடுகள், 5படி வறுத்த பயறு, வற்றலாக்கப்பட்ட நூறு திராட்சைக்குலைகள், வற்றலாக்கப்பட்ட இருநூறு அத்திப்பழ அடைகள் - I சாமுவேல் 25 : 18

6. சிறிய அடை - I இராஜாக்கள் 17 : 13

7. வறுத்த பயறு, அப்பங்கள் - I சாமுவேல் 17 : 17

8. ருசியுள்ள பதார்த்தங்களாக சமைக்கப்பட்ட வெள்ளாட்டுக் கொட்டிகள், திராட்சைரசம் - ஆதியாகமம் 27 : 17, 25

9. இயேசுகிறிஸ்துவின் சரீரத்தை நினைவுக்கூறும் அப்பமும், உடன்படிக்கையின் இரத்தத்தை நினைவுக்கூறும் திராட்சப்பழரசமும் - மத்தேயு 25 : 26 , 29

10. பருப்பு முதலான மரக்கறிகள், தண்ணீர் - தானியேல் 1 : 12, 16

11. தேன் - நியாயதிபதிகள் 14 : 9

12. தேனுள்ள தேன்கூடு - I சாமுவேல் 14 : 26, 27

13. ஆடுகளையும், மாடுகளையும், கன்றுக்குட்டிகளையும் அடித்து இரத்ததோடே புசித்தார்கள் - I சாமுவேல் 14 : 32

14. பரிசுத்த அப்பம் - I சாமுவேல் 21 : 6

15. பொரித்த மீன் கண்டம்,  தேன் கூட்டுத்துணிக்கை - லூக்கா 24 :  42

16. 5 அப்பம், 2 மீன் - யோவான் 6 : 9

17. 7 அப்பங்கள், சில சிறு மீன்கள் - மாற்கு 8 : 5 - 7

18. அப்பம் - மாற்கு 7 : 27

19 . பிள்ளைகள் சிந்துகிற துணிக்கைகள் - மாற்கு 7 : 28

20. தவிடு - லூக்கா 15 : 16

21. என்னை அனுப்பினவருடைய சித்தத்தின் படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறதுஎன்று கிறிஸ்து சொல்கிறார். - யோவான் 4 : 34

22. சர்ப்பத்தினுடைய தந்திரத்துக்கு தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியை புசித்தார்கள். சர்த்தருடைய கட்டளைக்குக் கீழ்ப்படியாமல் நன்மை தீமை அறியத்த்தக்க விருட்சத்தின் கனியை புசித்தார்கள் - ஆதியாகமம் 3 : 2 - 6

23. அப்பமும், தண்ணீரும் - I இராஜாக்கள் 13 : 19

24. நெருப்பினால் சுட்ட ஆட்டுக்குட்டியின் மாமிசம், புளிப்பில்லா அப்பம், கசப்பான கீரை  - யாத்திராகமம் : 12 : 8

25. மன்னா, காடை - யாத்திராகமம் 16 : 15,31  - எண்ணாகமம் 11 : 31

26. மச்சங்கள், வெள்ளரிக்காய்கள், கொம்மட்டிக்காய்கள், கீரைகள், வெண்காயங்கள், வெள்ளைப்பூண்டுகள் - எண்ணாகமம் 11 : 5

27. தழலில் சுடப்பட்ட அடை, தண்ணீர் - I இராஜாக்கள் 19 : 6 - 8

28. அப்பமும், தண்ணீருமான பெரிய விருந்து - II இராஜாக்கள் 6 : 22,23

29. கோதுமை மா, வாற்கோதுமை - II இராஜாக்கள் 7 : 1, 16

30. கூழ் - II இராஜாக்கள் 4 : 38, 40

31. அத்திப்பழ அடையின் ஒரு துண்டு, அப்பம், திராட்சைக்குலைகள், தண்ணீர் - I சாமுவேல் 30 : 11, 12

32. அப்பம் , பயற்றங்கூழ் - ஆதியாகமம் 25 : 34

33. சிவப்பான கூழ் - ஆதியாகமம் 25 : 30

34. சமையல் பண்ணப்பட்ட கொழுத்த கன்றுக்குட்டி, அப்பங்கள் - I சாமுவேல் 28 : 24, 25

35. அப்பமும், திராட்சரசமும் - ஆதியாகமம் 14 : 18



வேத வினா விடை 1-ன் வெற்றியாளர்

1. திருமதி . ரூபா நோயல்


வாழ்த்துகள் ..... 

Comments

Popular posts from this blog

வேத வினா விடை - 42 (04.07.2021)

  கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே! அனைவருக்கும்  தோத்திரங்களும் வாழ்த்துக்களும். முக்கியமான குறிப்புகள் :  *விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும். *வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.  * சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். *  அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா:  தேசத்தில் ........ 41 :  30) *மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும். விடைகளை இரவு 10 மணிக்கு முன் அனுப்பவும். விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: 97910 29324 பகுதி : முழு வேதாகமம் இன்றைய கேள்விகள்: 1)சீமோன் பேதுரு இயேசுவைப் பிடிக்க வந்தவர்களில், பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலது காதற வெட்டினார். அந்த வேலைக்காரனின் பெயர் என்ன? _______________...

வேத வினா விடை - 06 ( 29.05.2021)

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே! அனைவருக்கும்  தோத்திரங்களும் வாழ்த்துக்களும். முக்கியமான குறிப்புகள்:  *விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும். *வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.  * சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். *  அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா:  தேசத்தில் ........ 41 :  30) *மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும். விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: +91 9791029324 பகுதி : முழு வேதாகமம் 1)இயேசு கிறிஸ்து _______வினுடைய விசுவாசம் ஒழிந்துபோகாதபடி வேண்டிக்கொண்டார். 2)தாவீது குடியிருக்கும் படி கர்த்தர் தாவீதை அனுப்பிய பட்டணம் _______. 3)யோவான்ஸ்நானகன் பிரசங்கித்த வனாந்தரம் உள்ள இடம்____. 4)ராஜாவினிட...

வேத வினா விடை -13 ( 06.04.2020)

அன்பு இறை மக்களே,          சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் தேர்வினை சற்று எளிமையாக நடத்துவது நம் குழந்தைகளுக்குகாகத்தான்.... ஞாயிறுபள்ளி நடைபெறாத சூழலில் தொலைக்காட்சி, மொபைல் விளையாட்டுகளில் நேரத்தை கழிக்காமல் அவ்வப்போது வேத வசனங்களை நினைவுப்படுத்த நாம் வாய்ப்பு ஏற்படுத்து தர வேண்டும். அதற்காகத்தான் எளிமையாக தேரிவுகள் வைக்கப்பட்டன. மீன் யாரை விழுங்கினேன் போன்ற கேள்விகளுக்கு நிச்சயம் நம் குழந்தைகள் பதிலளிப்பர். ஒரு கேள்விக்கு சரியான பதில் அளித்து விட்டு பாராட்டுப் பெற்றாலே அவ்ர்களின் ஆர்வம் அதிகரித்து அடுத்தடுத்த கேள்விகளுக்கு  விடை கண்டறிய முயற்சிப்பர். எனவே முடிந்த அளவு அவர்களையும் தேர்வில் பங்கு கொள்ள வையுங்கள்..... அவர்களிடம் கொடுத்தே link ல் விடைகளை போட சொல்லுங்கள்........ 1. கல்லெறிந்துக் கொல்லப்பட்டவன் யார்? 2. பிறந்த பின் மறுபெயர் பெற்றவன் யார்? 3. ஏழு குமாரரைப் பெற்ற பிரதான ஆசாரியன் யார்? 4. இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டவன் யார்? 5. ஆண்டவரே நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டவன் யார்? 6. சவுக்கினால் ...