கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே! அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும். மீண்டும் ஒரு புதிய மாதத்தை காண கிருபை செய்த தேவனுக்கு தோத்திரம்! முக்கியமான குறிப்புகள்: *விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும். *வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது. * சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். * அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30) *மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும். பகுதி : யோனா 1. நினிவே ஜனங்கள் தங்கள் பொல்லாத வழியை விட்டு திரும்பியதால் தேவன் மனஸ்தாபப்பட்டு தான் அவர்களுக்கு சொன்ன தீங்கை செய்யாத இருந்தார் என்பதை அறிந்தவுடன் யோனா என்ன செய்தான்? 2. யோனாவின் தலையின் மேல் நிழல் உண்டாக...