கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி : ரூத்
1. ஒளிமுகவாசலிலே இருக்கிற சகல ஜனங்களும்,மூப்பரானவர்களும் போவாசை நோக்கி நீ எப்பிராத்தாவிலே எப்படி இருப்பாய் என்று வாழ்த்தினார்கள்?
2. அப்பொழுது ஸ்திரீகள் நகோமியை பார்த்து, சுதந்தரவாளி அற்றுப் போகாதபடிக்கு , இன்று உனக்கு தயை செய்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம், அவன் பேர் _________________ பிரபலமாகக்கடவது என்றார்கள்.
3. ரூத்தின் மகனுக்கு வளர்ப்புத்தாயாக இருந்தவள் யார்?
4. ஓபேத்தின் குமாரன் யார்?
5. நகோமி எதை விற்கப்போவதாக போவாஸ் கூறினான்?
6. எத்தனை படி வாற்கோதுமையை தனக்கு போவாஸ் கொடுத்ததாக ரூத் தன் மாமியாரிடம் கூறினாள்?
7. நகோமியின் மருமகள் ரூத்தை போவாஸ் ஏன் மனைவியாகக் கொண்டான்?
விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்:
நேற்றைய சரியான விடைகள்:
1.ரூத் விடியற்காலமட்டும் போவாஸ் பாதத்தண்டையில் படுத்திருந்தாள்.
ரூத் 3:14
2.ஒரு ஸ்திரீ தன் பாதத்தண்டையிலே படுத்திருக்கிறதைக் கண்டு, அருண்டு போனான்.
ரூத் 3:8
3.நீ தரித்திரரும் ஐசுவரியவான்களுமான வாலிபர்களின் பிறகே போகாததினால்
ரூத் 3:10
4.குணசாலி
ரூத் 3:11
5.ஒருவன் தன் பாதரட்சையைக் கழற்றி, மற்றவனுக்குக் கொடுப்பான். இது இஸ்ரவேலிலே வழங்கின உறுதிப்பாடு.
ரூத் 4:7
6.போவாஸ் மிகுந்த ஆஸ்திக்காரன்
ரூத் 2:1
7.மக்லோனின் மனைவியாயிருந்த மோவாபிய ஸ்திரீயான ரூத்தை எனக்கு மனைவியாகக் கொண்டேன்.
ரூத் 4:10
8.எலிமெலேக்கின் வம்சம்
ரூத் 2:3
9.ஒலிமுகவாசலில் இருக்கிற சகல ஜனங்களும் மூப்பரானவர்களும் சாட்சிகள்.
ரூத் 4:11
10.போவாஸ்
ரூத் 4:12
சரியான விடைகளை பதிவிட்டவர்கள்:
அனைவரும் முழு மதிப்பெண் பெற்றுள்ளீர். வாழ்த்துக்கள்
Comments
Post a Comment