கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி : கலாத்தியர்
1. மாம்சத்தின் கிரியைகளை நடப்பிக்கிறவர்களுக்கு என்ன சம்பவிக்கும்?
2. புளித்தமாவானது பிசைந்த மாவனைத்தையும் ________________.
3. நீதியானது நியாயப்பிரமாணத்தினாலே வருமானால் எது
வீணாயிருக்கும் என்று பவுல் கூறுகிறார்?
4. எதன் அடிப்படையில் வானத்திலிருந்து வந்த தூதனும் சபிக்கபட்டவனாய் இருப்பான் என்று பவுல் கூறுகிறார்?
5. பேதுருவை பவுல் ஏன் முகமுகமாய் எதிர்த்தான்?
6. ஆபிரகாமின் பிள்ளைகள் யார்?
7. என் சிறுபிள்ளைகளே _____________உங்களிடத்தில் உருவாகுமளவும் உங்களுக்காக மறுபடியும் கர்ப்பவேதனைப்படுகிறேன்.
8. விருத்தசேதனம் பண்ணிக்கொண்டால் எதை நிறைவேற்ற கடனாளிகளாயிருக்கிறோம்?
9. ஆபிரகாமுக்கு எது நீதியாக எண்ணப்பட்டது?
10. கிறிஸ்து இயேசுவினிடத்தில் விருத்தசேதனமும் , விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுக்கும் உதவாது, அன்பினால் கிரியை செய்கிற ____________ உதவும்.
11. கலாத்தியர் புத்தகத்தை எழுதியவர் யார்?
12. எதன்பொருட்டு நாம் தேவபுத்திரராயிருக்கிறோம் என்று பவுல்
கலாத்தியருக்கு கூறுகிறார்?
13. யாதொரு குற்றத்தில் ஒருவன் அகப்பட்டால் ஆவிக்குரியவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று பவுல் கூறுகிறார்?
14. இயேசு கிறிஸ்துவை பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கிற வாக்குத்தத்தம் யாருக்கு அளிக்கும்படி வேதம் எல்லோரையும் ஏகமாய்ப் பாவத்தின் கீழ் அடைத்துப்போட்டது?
விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்:
நேற்றைய சரியான விடைகள்:
1.நானூற்று முப்பது
கலாத்தியர் 3:17
2.தேவதூதனைப்போலவும், கிறிஸ்து இயேசுவைப்போலவும்
கலாத்தியர் 4:14
3.உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக,
கலாத்தியர் 5:14
4.கிறிஸ்துவினுடைய சிலுவையினிமித்தம் துன்பப்படாதபடிக்கே
கலாத்தியர் 6:12
5.அரபிதேசத்திலுள்ள சீனாய்மலை.
கலாத்தியர் 4:25
6. கிறிஸ்துவினால்
கலாத்தியர் 5:2
7.விருத்தசேதனத்தைப்
கலாத்தியர் 5:11
8.ஆவிக்கேற்படி நடந்துகொள்ளுங்கள்,
கலாத்தியர் 5:16
9. ஆபிரகாமின் சந்ததியாராயும், வாக்குத்தத்தத்தின்படியே சுதந்தரராயுமிருக்கிறீர்கள்.
கலாத்தியர் 3:29
10. சோதிக்கப்படாதபடிக்கு. கலாத்தியர் 6:1
சரியான விடைகளை பதிவிட்டவர்கள்:
அனைவரும் முழு மதிப்பெண் பெற்றுள்ளீர். வாழ்த்துக்கள்
Comments
Post a Comment