கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி : ஓசியா
1. யாரோடு கர்த்தருக்கு வழக்கு இருக்கிறது?
2. திருப்பிப் போடாத அப்பம் யார்?
3. சோரம்போனது யார்? தீட்டுப்பட்டது யார்?
4. கர்த்தரிடத்திற்கு திரும்புவோம் வாருங்கள்; நம்மை ____________.
5. இருதயத்தை மயக்குபவைகள் எவைகள்?
6. யூதாவிற்கு நியமிக்கப்பட்டிருக்கிறது என்ன?
7. இஸ்ரவேல் எதைப்போல அடங்காதிருக்கிளது?
8. என் ஜனங்கள் _________________ சங்காரமாகிறார்கள்.
9. எப்பிராயீம் யூதாவின் பக்தி எப்படி ஒழிந்துபோகிறது?
10. தேசத்திலே என்ன என்ன இல்லை என்று கர்த்தர் சொல்லுகிறார்?
விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்:
நேற்றைய சரியான விடைகள்:
1.புத்தியில்லாத கன்னிகைகள்
மத்தேயு 25:11
2.பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பான்.என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.
மத்தேயு 7:21
3. என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம்
மத்தேயு 6:31,32
4.இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள்
மத்தேயு 5:8
5.சமாதானம்பண்ணுகிறவர்கள்
மத்தேயு 5:9
6.அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ,
யோவான் 1:12
7.ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே
யோவான் 17:3
8. உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழுப் பலத்தோடும் உன் முழுச்சிந்தையோடும் அன்புகூர்ந்து, உன்னிடத்தில் அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக
லூக்கா 10:27
9.1.நானே கிறிஸ்து
மத்தேயு 24:5
மாற்கு 13:6
2.ஜீவ அப்பம் நானே.
யோவான் 6:48
3.நானே வாசல்,
யோவான் 10:9
4.நானே நல்ல மேய்ப்பன்,
யோவான் 10:11
5.நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்.
யோவான் 11:25
6. நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்.
யோவான் 14:6
7.நானே திராட்சச்செடி
யோவான் 15:5
10.நியாயசாஸ்திரிகள்
நீங்களும் உட்பிரவேசிக்கிறதில்லை, உட்பிரவேசிக்கிறவர்களையும் தடைபண்ணுகிறீர்கள் என்றார்.
லூக்கா 11:52
சரியான விடைகளை பதிவிட்டவர்கள்:
பங்குபெற்ற அனைவரும் முழு மதிப்பெண் பெற்றுள்ளீர்.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
Comments
Post a Comment