கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி : அப்போஸ்தலர் நடபடிகள்
1. ஒரு பட்டாளக்காரனுக்கு ஞானஸ்நானம்
கொடுத்தது யார்?
2. விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்றும் பாவியாயிருந்தது யார்?
3. இரவு ஞானஸ்நானம் பெற்றவர்கள் யார்?
4. காயங்களை கழுவினது யார்?
5. அத்தேனே பட்டணத்தில் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட ஒரு ஸ்திரீ யார்?
6. பிலிப்பு பட்டணத்தில் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட ஒரு ஸ்திரீ யார்?
7. லீஸ்திராவில் கர்த்தரை விசுவாசித்திருந்த ஒரு யூத ஸ்திரீ யார்?
8. நிர்வாணிகளாய் வீட்டை விட்டு ஓடின மந்திரவாதிகள் யார்?
9. நாற்பது வருடம் சப்பாணியாயிருந்தவனை குணமாக்கினவர் யார்?
10. லித்தா ஊரில் எட்டு வருஷமாய் கட்டிலில் திமிர்வாதக்காரனாய் கிடந்தவனை குணமாக்கினவர் யார்?
விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்:
நேற்றைய சரியான விடைகள்:
1.அனனியா சப்பீராள்
அப்போஸ்தலர் 5:1,4
2. அப்போஸ்தலனாகிய பவுல்
அப்போஸ்தலர் , 18:1-6 28:3
3. கிரேக்கப் பாஷையில் தொற்காள் என்று அர்த்தங்கொள்ளும் தபீத்தாள்
அப்போஸ்தலர் 9:36
4. தமஸ்குவுக்குச் சமீபித்தபோது,
அப்போஸ்தலர் 9:3
5.மெசொப்பொத்தாமியா நாடு
அப்போஸ்தலர் 7:2
6.அப்போஸ்தலனாகிய பவுல்
அப்போஸ்தலர் 16:3
7.பவுலும் ரோமர்களும் அப்போஸ்தலர்27;18
8.பேதுரு
அப்போஸ்தலர் 11:5
9.அனனியா
அப்போஸ்தலர் 9:17, 18
10.பிலிப்பு
அப்போஸ்தலர் 8:38
சரியான விடைகளை பதிவிட்டவர்கள்:
பங்குபெற்ற அனைவரும் முழு மதிப்பெண் பெற்றுள்ளீர்.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
Comments
Post a Comment