கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி : அப்போஸ்தலர் நடபடிகள்
1. தேவ வசனத்தை கேட்க ஆசையாயிருந்த விவேகமுள்ள அதிபதி யார்?
2. யாருடைய தகப்பன் ஜுரத்தினால் வருத்தப்பட்டு கிடந்தான்?
3. 120 சீஷர்கள் பரிசுத்த ஆவியை பெற்றது எப்போது?
4. எகிப்துக்கப்போன 70 பேர் யார்?
5. வேதப் பிரமாணத்தின்படி பக்திமானாயிருந்த ஒரு மனிதன் யார்?
6. வேதப் பிரமாணத்தின்படி திட்டமாய் போதிக்கப்பட்டவன் யார்?
7. ஜாமீன் வாங்கிக் கொண்டு விடப்பட்டவர்களை பற்றி எங்கே வாசிக்கிறோம்?
8. அம்மோனியரின் தெய்வத்தின் பெயர் என்ன?
9. எபேசியருடைய தேவியின் பெயர் என்ன?
10. நானும் ஒரு மனுஷன்தான் என்றவன் யார்?
விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்
(லிங்க் விரைவில் அனுப்பப்படும்)
நேற்றைய சரியான விடைகள்:
1.லீஸ்திராவிலே
உள்ள ஜனங்கள்
அப்போஸ்தலர் 14:8,11
2.மாயவித்தைக்காரராயிருந்தவர்களில் அநேகர்
அப்போஸ்தலர் 19:19
3.ஐத்திகு ----பவுல் உயிரோடு எழுப்பினார்.
அப்போஸ்தலர் 20:9,10
தொற்காள் என்று அர்த்தங்கொள்ளும் தபீத்தாள் -----பேதுரு உயிரோடு எழுப்பினார்
அப்போஸ்தலர் 9:36,40
4.சப்பீராள்
அப்போஸ்தலர் 5:1,10
5. சாத்தானும் அவன் சேனையும். அப்போஸ்தலர் 5:3
6. மாயவித்தைகாரணாகிய சீமோன்
அப்போஸ்தலர் 8: 18- 20
7.பேதுரு
அப்போஸ்தலர் 12:5-7
8. பேதுரு சிறையிலிருந்து தேவ தூதனால் வெளி வரும் போது.
அப்போஸ்தலர் 12:1-10
9.பவுல்
அப்போஸ்தலர் 26:1,10
10.கல்லியோன்
அப்போஸ்தலர் 18:12
சரியான விடைகளை பதிவிட்டவர்கள்:
விடைகளை நீங்களாகவே சுய மதிப்பீடு செய்து கொள்ளவும். நன்றி
Kindly Self evaluate your answers. Thank you.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
Comments
Post a Comment