கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி : அப்போஸ்தலர் நடபடிகள்
1. " சகோதரரே நாங்கள் என்ன செய்ய வேண்டும்" என்று கேட்டவர்கள் யார்?
2. "ஆண்டவரே நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர்" என்று கேட்டவன் யார்?
3. சவுக்கினால் அடிக்கப்பட்டவர் யார்?
4. "நாங்கள் பெயர்போன இரண்டு பாவிகள்;......"நாங்கள் யார்?
5. பவுல் அப்போஸ்தலனை தன் வீட்டில் வந்து தங்கியிருக்க வருந்திக் கேட்டுக் கொண்ட ஸ்திரீ யார்?
6. உபவாசம் பண்ணினவர்கள் யார்? யார்?
7. விரியன் பாம்பு கடித்தும் சாவாமல் பிழைத்தவன் யார்?
8. வெள்ளியும் பொன்னும் என்னிடத்தில் இல்லை என்று சொன்னது யார்?
9. என் பிராணனை நான் அருமையாக எண்ணேன் என்று சொன்னவர் யார்?
10. தேவன் ஆபிரகாமுக்கு முதலாவது தரிசனமான ஊர் எது ?
விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்:
நேற்றைய சரியான விடைகள்:
1. பவுலும் அவனைச் சேர்ந்தவர்களும் அப. 27:38
2. சிறையிலிருந்து வீட்டுக்கு வந்தபோது12:17
3. ஜெப ஆலயத்திலும் பவுலை கைது செய்த போதும் 13:16, 21:40
4. மரணம் :5:1- 11
5. ஸ்தேவான் :6:58- 60
6. பவுல்: 13:9
7. ஸ்கேவா 19:14
8. எபேசு பட்டணத்தில் பவுல் பிரசங்கித்த போது : 19: 1- 7
9. சிறைச்சாலைக்காரான் :16:27-30
சரியான விடைகளை பதிவிட்டவர்கள்:
விடைகளை நீங்களாகவே சுய மதிப்பீடு செய்து கொள்ளவும். நன்றி
Kindly Self evaluate your answers. Thank you.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
Comments
Post a Comment