கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி : அப்போஸ்தலர் நடபடிகள்
1. தன் பெயருடைய ஒருவன் தன் வீட்டில் நெடுநாளாய் தங்கியிருந்தான். அவன் யார்?
2. "ஆறுதலின் மகன்" இவன் யார்?
3. பவுலை காவலிலிருந்து விடுதலை பண்ணக் கைக் கூலிக்காக பிரயாசப்பட்டது யார்?
4. பவுலுக்கு விரோதமாக எந்தக் குற்றத்தைச் சாட்டலாமென்று அறியாதிருந்தவன் யார்?
5. தனக்குண்டான எல்லாவற்றையும் விற்று அப்போஸ்தலர் பாதத்தில் வைத்தவன் யார்?
6. தேவனிடத்தில் பொய் சொன்ன ஒரு மனிதன் யார்?
7. அப்போஸ்தலர் பேதுருவின் பாதத்தில் விழுந்து செத்த பெண் யார்?
8. மரித்தபின் தன் புருஷனண்டையில் அடக்கம் பண்ணப்பட்ட ஸ்திரீ யார்?
9. நூதனமான காரியங்களை எங்கள் காதுகள் கேட்கப் பண்ணுகிறாய் என்றவர்கள் யார்?
10. "மரித்தோர் உயிர்த்தெழுதலில் அவர் முதல்வராகி" எனக் காணப்படுவது எங்கே?
விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்:
நேற்றைய சரியான விடைகள்:
1. அந்தியோக்கியா சீஷர்களுக்கு
அப்போஸ்தலர் 11:26
2.அகிரிப்பா ராஜா
அப்போஸ்தலர் 26:28
3.கடுங்காற்று
அப்போஸ்தலர் 27:14
4.பெரோயா பட்டணத்தார்
அப்போஸ்தலர் 17:10-12
5.பவுல் பா்னபா
அப்போஸ்தலர் 15:36-39
6.சொஸ்தேனே
அப்போஸ்தலர் 18:17
7.கிறிஸ்பு
அப்போஸ்தலர் 18:8
8. தீமோத்தேயு
அப்போஸ்தலர் 16:1-2
9.அனனியா , கொர்நேலியு
அப்போஸ்தலர் 10:22, 22:12
10.அப்போஸ்தலர் 7:11
சரியான விடைகளை பதிவிட்டவர்கள்:
விடைகளை நீங்களாகவே சுய மதிப்பீடு செய்து கொள்ளவும். நன்றி
Kindly Self evaluate your answers. Thank you.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
Comments
Post a Comment