கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும் .
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி : யோசுவா
1. தேசத்தை வேவுபார்க்கும்படி இஸ்ரவேல் புத்திரரில் சில மனுஷர் வந்ததாக
யாருக்கு சொல்லப்பட்டது?
2. தேசத்தை வேவு பார்க்கும்படி வந்த மனிதர்கள் எங்கே தங்கினார்கள்?
3. வேவுக்காரர்கள் ஏரிகோவில் இருந்து எப்படி தப்பிச் சென்றனர்?
4. வேவுக்காரர்களை தேடினவர்கள் திரும்பிவரும் மட்டும் வேவுகாரர்கள் எத்தனை நாட்கள் ஒளிந்திருந்து போக வேண்டும் என ராகாப் கூறினாள்?
5. வேவுகாரர்கள் திரும்பிவந்து யோசுவாவிடம் என்ன கூறினார்கள்?
6. ராகாப் வேலைக்காரரை எங்கே ஒளித்து வைத்திருந்தாள்?
7. இஸ்ரவேல் ஜனங்களுக்கும் உடன்படிக்கை பெட்டியை சுமக்கிற ஆசாரியர்களுக்கும் இடையில் எவ்வளவு தூரம் இருக்க வேண்டுமென்று யோசுவா கூறினான்?
8. இஸ்ரவேல் புத்திரர் அனைவரும் அறியும்படிக்கு கர்த்தர் எந்த அதிசயத்தின் மூலம் யோசுவாவை அவர்களுக்கு முன்பாக மேன்மை படுத்தினார்?
9. இஸ்ரவேல் புத்திரர் யோர்தானின் நடுவிலே எடுத்த பன்னிரண்டு கற்களை என்ன செய்தனர்?
10. யோசுவா யோர்தானிலிருந்து கரையேறி வாருங்கள் என்று __________________ கட்டளையிட்டான்.
விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்:
நேற்றைய சரியான விடைகள்:
1.யோசுவா
யோசுவா 1:1
2.உன் வாயைவிட்டு
யோசுவா 1:8
3.கர்த்தர் மோசேயின் ஊழியக்காரரான நூனின் குமாரன் யோசுவாவிடம் சொன்னது
யோசுவா 1:1,,9
4.இன்னும் மூன்றுநாளைக்குள்ளே
யோசுவா 1:11
5.யோர்தான்
யோசுவா 1:2
6.பலங்கொண்டு திடமனதாயிரு.
யோசுவா 1:6
7.சகோதரருக்கு
யோசுவா 1:15
8.கர்த்தருடைய தாசனாகிய மோசே யோசுவா 1:13
9.உன் வழியை
யோசுவா 1:8
10.ராகாப் என்னும் பெயர்கொண்ட வேசி
யோசுவா 2:1
விடைகளை நீங்களாகவே சுய மதிப்பீடு செய்து கொள்ளவும். நன்றி
Kindly Self evaluate your answers. Thank you.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
Comments
Post a Comment