கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும் .
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி : யோசுவா
1. எரிகோவின் சமனான வெளிகளுக்கு யுத்த சன்னத்தராய் எவ்வளவு பேர் கடந்து போனார்கள்?
2. யோர்தானின் தண்ணீர் தன்னிடத்திற்கு எப்போது திரும்பி முன் போல் அதன் கரையெங்கும் புரண்டது?
3. இஸ்ரவேல் ஜனங்கள் யோர்தானில் இருந்து எப்போது கரையேறினார்கள்?
4. இஸ்ரவேல் புத்திரருக்காக யோர்தானை வற்றிப் போகப் பண்ணியதை கேட்ட எமோரியரின் சகல ராஜாக்களின் நிலவரம் எப்படி இருந்தது?
5. கில்காலிலே யோசுவா யாரை விருத்தசேதனம் செய்தான்?
6. கில்காலிலே நாட்டப்பட்ட கற்கள் எத்தனை?
7. இஸ்ரவேல் புத்திரர் நாளை இந்த கற்களை குறித்து தங்கள் பிதாக்களை கேட்கும்போது என்ன சொல்ல வேண்டும் என்று யோசுவா கூறினார்?
8. கர்த்தர் யோசுவாவை நோக்கி இன்று எகிப்தின் ____________ உங்கள்மேல் இராதபடிக்கு புரட்டிப் போட்டேன் என்றார்.
9. மன்னா எப்போது முதல் பெய்யாமல் ஒழிந்தது?
10. ரூபன் புத்திரரும் காத் புத்திரரும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும் மோசே தங்களுக்கு சொன்னபடியே _______________ நின்றனர்
விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்:
நேற்றைய சரியான விடைகள்:
1. எரிகோவின் ராஜாவுக்கு. 2:2
2. இராகாப் என்னும் வேசியின் வீட்டில் : 2:1
3. இராகாப் வீட்டின் ஜன்னல் வழியாய் கயிற்றின் மூலம் இறக்கிவிடபட்டு, மலையில் போய் ஒளித்து கொண்டு, அங்கிருந்து இறங்கி ஆற்றை கடந்து, : 2:15,16,23
4. மூன்று நாட்கள் : 2:16
5. கர்த்தர் தேசத்தை எல்லாம் நமது கையில் ஒப்புக்கொடுத்தார் : 2:24
6. அவள் வீட்டின் மேல் பரப்பப்பட்ட சணல் தட்டைகளுக்குள்ளே 2:6
7. இரண்டாயிரம் முழங்க்தூரமான இடம் :3:4
8. கர்த்தரின் பெட்டியை சுமக்கிற ஆசாரியர்களின் உள்ளங்கால்கள் யோர்தானின் தண்ணீரில் பட்டவுடன் ஜலம் குவியலாக நின்ற அதிசயம் :3:14 -17
9. அக்கரைக்கு கொண்டு போய் நாட்டினார்கள் 4:8,9
10. ஆசாரியர்களுக்கு :4:17
விடைகளை நீங்களாகவே சுய மதிப்பீடு செய்து கொள்ளவும். நன்றி
Kindly Self evaluate your answers. Thank you.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
Comments
Post a Comment