கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும் .
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி : யோசுவா
1. எக்காளங்களை ஊதுகிற ஆசிரியர்களுக்கு முன்பாக நடந்தவர்கள் யார்?
2. கர்த்தர் யோசுவாவிடம் எதை ஒப்புக் கொடுத்ததாக கூறினார்?
3. கர்மீ எந்த கோத்திரத்தைச் சேர்ந்தவன்?
4. ஆயி பட்டணத்துக்கு 3000 பேரை மட்டும் யோசுவா அனுப்பியதன் காரணம் என்ன?
5. ஆயிப்பட்டணத்து ஜனங்கள் இஸ்ரவேல் ஜனங்களில் எத்தனை பேரை கொன்று போட்டனர்?
6. ஆகானுக்கும் அவன் குடும்பத்துக்கும் நடந்தது என்ன?
7. சாபத்தீடானதிலே சிலதை எடுத்துக்கொண்ட இஸ்ரவேல் புத்திரன் யார்?
8. எரிகோ பட்டணத்தை கட்டும்படி எழும்பும் மனுஷன் கர்த்தருக்கு முன்பாக எப்படிப்பட்டவனாக இருப்பான் என்று யோசுவா கூறினான்?
9. ஆயிப்பட்டணத்திற்கு யுத்த வீரர்கள் எத்தனை பேரை யோசுவா தெரிந்து எடுத்தான்?
10. யுத்த வீரர்கள் பெத்தேலுக்கும் ஆயிபட்டணத்துக்கும் நடுவே எங்கே பதிவிருந்தார்கள்?
விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்:
நேற்றைய சரியான விடைகள்:
1.ஒருவர் அவனுக்கு எதிரே நின்றார். உருவின பட்டயம் அவர் கையில் இருந்தது.
யோசுவா 5:13
2.ஒருதரம்
யோசுவா 6:3
3.ஏழுதரம்
யோசுவா 6:4
4.கர்த்தருக்குப் பரிசுத்தமானவைகள். அவைகள் கர்த்தரின் பொக்கிஷத்தில் சேர்த்தார்கள்
யோசுவா 6:19, 24
5.இடிந்துவிழுந்தது.
யோசுவா 6:20
6.கர்த்தருடைய சேனையின் அதிபதி
யோசுவா 5:15
7.ராகாப் என்னும் வேசியையும் அவள் தகப்பன் வீட்டாரையும் அவளுக்குள்ள யாவையும்
யோசுவா 6:25
8.மாதத்தின் பதினாலாம் தேதி
யோசுவா 5:10
9.ஏழாம்நாளில் பட்டணத்தை ஏழுதரம் சுற்றிவரக்கடவர்கள். ஆசாரியர் எக்காளங்களை ஊதவேண்டும்.
அவர்கள் அந்தக் கொம்புகளினால் நெடுந்தொனி இடும்போதும், நீங்கள் எக்காளச்சத்தத்தைக் கேட்கும்போதும், ஜனங்கள் எல்லாரும் மகா ஆரவாரத்தோடே ஆர்ப்பரிக்கக்கடவர்கள். அப்பொழுது பட்டணத்தின் அலங்கம் இடிந்துவிழும்.
யோசுவா 6:4-5
10.ஏழு
யோசுவா 6:4
விடைகளை நீங்களாகவே சுய மதிப்பீடு செய்து கொள்ளவும். நன்றி
Kindly Self evaluate your answers. Thank you.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
Comments
Post a Comment