கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும் .
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி : யோசுவா
1. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு யோசுவா ஏபால் பர்வதத்தில் எதைக் கட்டினான்?
2. யோசுவா எது மட்டும் ஈட்டியை நீட்டிக் கொண்டு இருந்த தன் கையை மடக்கவில்லை?
3. இஸ்ரவேல் ஜனங்களை ஆசீர்வதிக்கும்படி மோசே கட்டளையிட்டு இருந்தபடி ஜனங்கள் எங்கே நின்றார்கள்?
4. பொருத்துக:
எபிரோனின் ராஜா - போகன்
யர்மூத்தின் ராஜா - யாபின்
லாகீஸின் ராஜா - தெபீர்
எக்லோனின்ராஜா - அர்னோன்ஆற்றங்கரை
ஆத்சோரின் ராஜா - இராட்சதன்
ஆரோவேர் - ஓகாமு
ரூபனின் குமாரன் - யப்பியா
ஓக் - பீராம்
5. எர்மோன் மலையின் அடியிலே மிஸ்பா சீமையில் இருக்கிற ஜாதிகள் யார்?
6. இஸ்ரவேல் ஜனங்கள் யுத்தம் செய்து தோற்றுப் போன ஐந்து ராஜாக்களும் எங்கே ஒளிந்து கொண்டனர்?
7. கிதியோனின் குடிகள் இஸ்ரவேல் ஜனங்களை எப்படி வஞ்சித்தனர்?
8. இஸ்ரவேல் ஜனங்கள் எதை செய்யத் தவறினார்கள்?
9. கிபியோன் குடிகளுக்கு யோசுவா என்ன தண்டனை கொடுத்தான்?
10. எருசலேமின் ராஜா கிபியோன் குடிகளை குறித்து கேள்விப்பட்டு எதனால் பயந்து போனான்?
விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்:
நேற்றைய சரியான விடைகள்:
1.யுத்தசன்னத்தாரானவர்கள்
யோசுவா 6:9
2.எரிகோவையும் அதின் ராஜாவையும் யுத்தவீரரையும்
யோசுவா 6:2
3.யூதாகோத்திரம்
யோசுவா 7:1
4.கொஞ்சம்பேர்
யோசுவா 7:3
5.ஏறக்குறைய முப்பத்தாறுபேர்
யோசுவா 7:5
6.அவர்கள் மேல் கல்லெறிந்து, கற்களினால் மூடி.
பெரிய கற்குவியலைக் குவித்தார்கள்.
யோசுவா 7:25-26
7.கர்மீக்குப் பிறந்த ஆகான்
யோசுவா 7:1
8.கர்த்தருக்கு முன்பாகச் சபிக்கப்பட்டிருக்கக்கடவன்.
யோசுவா 6:26
9.முப்பதினாயிரம் பேர்
யோசுவா 8:3
10.ஆயிக்கு மேற்காகப்
யோசுவா 8:9
விடைகளை நீங்களாகவே சுய மதிப்பீடு செய்து கொள்ளவும். நன்றி
Kindly Self evaluate your answers. Thank you.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
Comments
Post a Comment