கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும் .
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி : யோசுவா
1. கீழ்கண்டவற்றில் எது மலை தேசத்திலிருந்து வேறுபடுகிறது?
அ) தெபீர் ஆ) எபிரோன். இ) ஆனால
. ஈ) எஸ்போன்
2. இஸ்ரவேல் புத்திரர் உடன் சமாதானமாய் இருந்த குடிகள் யார்?
3. ஏனாக்கியரில் சிலர் மாத்திரம் மீதியாய் இருந்த பட்டணம் எது?
4. இஸ்ரவேல் புத்திரரின் தேசத்தில் ______________ஒருவரும் மீதியாக வைக்கப்படவில்லை.
5. ஆரோவேர் தொடங்கி தெற்கே அஸ்தோத் பிஸ்காவுக்கு தாழ்வாய் இருக்கிற தேசத்தை ஆண்ட ராஜா யார்?
6. முறையினால் முறியடிக்கப்பட்ட ராஜாக்கள் யார்?
7. பெலிஸ்தியரின் ஐந்து அதிபதிகளின் நாடும் எந்த பட்டணங்களில் இருக்கிறது?
8. யோசுவா முறியடித்த ராஜாக்கள் எத்தனை பேர்?
9. யோசுவாவில் மிகச்சிறிய அதிகாரம் எது?
10. மேரோம் என்பது எதைக் குறிக்கிறது?
விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்:
நேற்றைய சரியான விடைகள்:
1.ஐந்து பேர்
யோசுவா 10:5
2.பர்வதங்களிலே குடியிருந்தனர்
யோசுவா 10:6
3.கல்மழையினால் யோசுவா10:11
4.சூரியனே, நீ கிபியோன்மேலும், சந்திரனே, நீ ஆயலோன் பள்ளத்தாக்கின்மேலும், தரித்துநில்லுங்கள்
யோசுவா 20:7, 12
5.கேசேரின் ராஜாவாகிய ஓராம்
யோசுவா10:33
6.குதிரைகளின் குதிகால் நரம்புகளை அறுத்து, அவர்கள் இரதங்களை அக்கினியால் சுட்டெரிக்கக்கடவாய்
யோசுவா11:6
7.ஆத்சோரின் ராஜாவாகிய யாபீனை
யோசுவா 11:1, 10
8.ஆத்சோர்
யோசுவா 11:13
9.ஏவியர்
யோசுவா 11:19
10.யுத்தம்பண்ண இஸ்ரவேலுக்கு எதிராக வரும்படிக்கு, அவர்களுடைய இருதயம் கடினமானது, இப்படியே அவர்கள்பேரில் இரக்கம் உண்டாகாமல், கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடி, அவர்களை அழித்துச் சங்காரம்பண்ணினதும் கர்த்தரால் வந்த காரியமாயிருந்தது
யோசுவா 11:20
விடைகளை நீங்களாகவே சுய மதிப்பீடு செய்து கொள்ளவும். நன்றி
Kindly Self evaluate your answers. Thank you.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
Comments
Post a Comment