கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும் .
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி : யோசுவா
1. அடைக்கல் பட்டணங்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் என்று கர்த்தர் ஏன் கூறினார்?
2. அறியாமல் கைபிசகாய் ஒருவனைகொன்றவன் அடைக்கலப் பட்டணத்தைதஞ்சம் அடைந்தால் என்ன செய்ய வேண்டும் என்று கர்த்தர் யோசுவாவிடம் கூறினார்?
3. கீழ்கண்டவற்றில் எவை எவை அடைக்கலப்பட்டணமாக ஏற்படுத்தப்பட்டது?
அ) எப்பீராயீமின் சீகேம் பட்டணம்
ஆ) நப்தலின் கேதேஸ் பட்டணம்
இ) மனாசேயின் கோலான் பட்டணம்
ஈ) அனைத்துமே
4. கோகாத்தியரின் வம்சங்களுக்கு விழுந்த சீட்டின்படி லேவியரில் ஆரோன் குமாரருக்கு கிடைத்த பட்டணங்கள் எத்தனை?
5. ரூபன், காத், செபுலோன் கோத்திரத்தின் மூலம் கிடைத்த பட்டணங்கள் எந்த புத்திரருக்கு கிடைத்தது?
6. பென்யமீன் கோத்திரத்தில் லேவி கோத்திரத்திற்கு எத்தனை பட்டணங்கள் கொடுக்கப்பட்டன?
7. நப்தலி கோத்திரத்தில் கொலை செய்தவனுக்கு அடைக்கலப் பட்டணமாக எத்தனை பட்டணங்கள் கொடுக்கப்பட்டது?
8. மனாசேயின் பாதி கோத்திரத்திற்கு ____________ பாசானிலே சுதந்திரம் கொடுத்தான்.
9. நானும் என் வீட்டருமோவென்றால் கர்த்தரையே சேவிப்போம் என்று கூறியது யார்?
10. யோசுவா இஸ்ரவேல் ஜனங்களிடம் உங்கள் தேவனாகி ய கர்த்தரின் உடன்படிக்கையை மீறி அந்நிய தேவர்களை பணிந்து கொண்டால் என்ன நடக்கும் என்று கூறினான்?
விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்:
நேற்றைய சரியான விடைகள்:
(விரைவில் பதிவிடப்படும்)
1.ஏழாம் சீட்டு
யோசுவா 19:40
2.எப்பிராயீமின் மலைத்தேசத்தில் இருக்கிற திம்னாத்சேரா
யோசுவா 19:50
3.லேசேமு
யோசுவா 19:47
4.மூன்று.
யோசுவா 21:32
5.நாற்பத்தெட்டு.
யோசுவா 21:41
6.இசக்கார் புத்திரருடைய கோத்திரம்
யோசுவா 19:18
7.பதின்மூன்று
யோசுவா 21:6
8.ஏத்
யோசுவா 22:34
9.தாண் கோத்திரம்
யோசுவா 21:23-24
10.உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொன்னபடி, அவர்தாமே உங்களுக்காக யுத்தம்பண்ணுகிறார்.
யோசுவா 23:10
விடைகளை நீங்களாகவே சுய மதிப்பீடு செய்து கொள்ளவும். நன்றி
Kindly Self evaluate your answers. Thank you.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
Comments
Post a Comment