கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி : முழு வேதாகமம்
1. யார் வாயிலிருந்து அக்கினி புறப்பட்டது?
2. யார் உதடு எரிகிற அக்கினி போன்றது ?
3. வாயின் சுவாசத்திலும் வருகையின் பிரசன்னத்தினாலும் அழிக்கப்படுவது யார்?
4. அடைக்கலான் குருவி அலைவது போலும் தகைவிலான் குருவி பறப்பது போலும் தங்காதது எது?
5. நன்மையினால் திருப்தி ஆவது எது ?
6. வான அப்பத்தினால் திருப்தியானவர்கள் யார்?
7. பின்வாங்கும் இருதயம் உள்ளவன் எதில் திருப்தி ஆவான்?
8. நல்ல மனுஷன் எதில் திருப்தி ஆவான்?
9. அவருடைய உண்மை தலைமுறை தலைமுறைக்கும் உள்ளது என்று எங்கு வாசிக்கிறோம்?
10. அவருடைய இரக்கம் தலைமுறை தலைமுறைக்கும் உள்ளது என்று எங்கு வாசிக்கிறோம்?
விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்:
நேற்றைய சரியான விடைகள்:
4.10.2020
1.ஒரு அறைவீட்டை
நியாயாதிபதிகள் 17:5
2.இருநூறு
நியாயாதிபதிகள் 17:4
3.பார்வைக்கு
நியாயாதிபதிகள் 17:6
4.தாண்
நியாயாதிபதிகள் 18:1
5.ஒர்பாள்
ரூத்
ரூத் 1:14
6.செட்டைகளின்கீழ்
ரூத் 2:12
7.சீலோ
நியாயாதிபதிகள் 18:31
8.லேவியன்
நியாயாதிபதிகள் 17:13
9.பென்யமீனருக்காக
நியாயாதிபதிகள் 21:15
10.லாயீஸ்
நியாயாதிபதிகள் 18:29
விடைகளை நீங்களாகவே சுய மதிப்பீடு செய்து கொள்ளவும். நன்றி
Kindly Self evaluate your answers. Thank you.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
Comments
Post a Comment