கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி : ஆதியாகமம் 26 - 50 & 1, 2, 3 யோவான்
1. வயல்வெளியில் எத்தனை ஆட்டு மந்தைகள் மடங்கி இருந்தது?
2. யாக்கோபு எவ்வூர் மேய்ப்பரிடம் நலம் விசாரித்தான்?
3. ராகேலின் மூத்த சகோதரி பெயர் என்ன?
4. யாக்கோபு எத்தனை வருஷம் ராகேலுக்காக வேலை செய்தான்?
5. லேயாளுக்கு லாபான் கொடுத்த வேலைக்காரியின் பெயர் என்ன?
6. ராகேலுக்கு லாபம் கொடுத்த வேலைக்காரியின் பெயர் என்ன?
7. கர்த்தர் என் சிறுமையை பார்த்தருளினார் எனப்பொருள் கொண்டவன் __________________.
8. நான் அற்பமாய் எண்ணபட்டதை கர்த்தர் கேட்டருளினார் என யார் கூறியது?
9. கர்த்தரைத் துதிப்பேன் என்று பெயர் பொருள் பெற்றவன் _______________
10. லேயாள் பெற்றெடுத்த பெண் குழந்தையின் பெயர் என்ன?
விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்:
நேற்றைய சரியான விடைகள்:
1.நாற்பது
ஆதியாகமம் 26:34
2.யூதீத்
ஆதியாகமம் 26:34
3.கேராரூர் பள்ளத்தாக்கு ஏசேக்கு
ஆதியாகமம் 26:20
4.கானானியருடைய குமாரத்திகளில்
ஆதியாகமம் 24:3
5.கானானியருடைய குமாரத்திகளில்
ஆதியாகமம் 28:1
6வீடேயல்லாமல் வேறல்ல, இது வானத்தின் வாசல்
ஆதியாகமம் 28:17
7.பெத்துவேல்
ஆதியாகமம் 25:20
8.தூணாக நிறுத்தி
தேவனுக்கு வீடு
ஆதியாகமம் 28:18
9.லூஸ்
ஆதியாகமம் 28:19
10.தசமபாகம்
ஆதியாகமம் 28:22
விடைகளை நீங்களாகவே சுய மதிப்பீடு செய்து கொள்ளவும். நன்றி
Kindly Self evaluate your answers. Thank you.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
Comments
Post a Comment