கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி : ஆதியாகமம் 26 - 50 & 1, 2, 3 யோவான்
1. ராகேல் தன் இளைய மகனுக்கு என்ன பெயரிட்டாள்?
2. ஈசாக்கு எத்தனை வருடம் உயிர் வாழ்ந்தான்?
3. ஏசா எம்மலையில் குடியேறினான்?
4. ரெகுவேலின் அம்மா பெயர் என்ன?
5. கோவேறு கழுதைகளை கண்டுபிடித்தவர் யார்?
6. பில்காள் - சில்பாள் யாக்கோபுக்கு பெற்ற குமாரர் எத்தனை?
7. யோசேப்பு எத்தனை வயதில் தன் சகோதரர்களோடு ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார்?
8. யோசேப்பை அதிகமாய் நேசித்ததால் யாக்கோபு செய்தது என்ன?
9. யோசேப்புக்கு தன் சகோதரர்கள் இட்ட பெயர் என்ன?
10. யோசேப்பு எத்தனை காசுக்கு விற்கப்பட்டான்?
விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்:
நேற்றைய சரியான விடைகள்:
1.ஏழுவிசை
ஆதியாகமம் 33:3
2.நான் உம்முடைய முகத்தைக் கண்டது தேவதூதனுடைய முகத்தைக் கண்டதுபோல இருக்கிறது.
ஆதியாகமம் 33:10
3.சுக்கோத்
ஆதியாகமம் 33:17
4.நூறு
ஆதியாகமம் 33:19
5.சீகேமின் தகப்பனாகிய ஏமோரின் புத்திரர் கையில்
ஆதியாகமம் 33:19
6.சீகேம்
ஆதியாகமம் 34:2
7.விருத்தசேதனமில்லாத புருஷனுக்கு நாங்கள் எங்கள் சகோதரியைக் கொடுக்கலாகாது. அது எங்களுக்கு நிந்தையாயிருக்கும். நீங்களும், உங்களுக்குள்ளிருக்கும் ஆண்மக்கள் யாவரும் விருத்தசேதனம் பண்ணப்பட்டு எங்களைப்போலாவீர்களானால், நாங்கள் சம்மதித்து,
உங்களுக்கு எங்கள் குமாரத்திகளைக் கொடுத்து, உங்கள் குமாரத்திகளை எங்களுக்குக் கொண்டு, உங்களோடே குடியிருந்து, ஏகஜனமாயிருப்போம்.
விருத்தசேதனம் பண்ணிக்கொள்வதற்கு எங்கள் சொல் கேளாமற்போவீர்களானால், நாங்கள் எங்கள் குமாரத்தியை அழைத்துக்கொண்டு போய்விடுவோம் என்று சொன்னார்கள்.
ஆதியாகமம் 34:14-17
8.சிமியோன் ,லேவி
ஆதியாகமம் 34:25
9.தங்கள் கையில் இருந்த எல்லா அந்நிய தெய்வங்களையும், தங்கள் காதணிகளையும்
ஆதியாகமம் 35:4
10.தெபொராள்
ஆதியாகமம் 35:8
விடைகளை நீங்களாகவே சுய மதிப்பீடு செய்து கொள்ளவும். நன்றி
Kindly Self evaluate your answers. Thank you.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
Comments
Post a Comment