கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
பகுதி : ஆதியாகமம் 26 - 50 & 1, 2, 3 யோவான்
1. யோசேப்பு எத்தனை சொப்பனம் கண்டான்?
2. யோசேப்பு எத்தனை சொப்பனத்திற்கு அதற்கு விளக்கம் கூறினான்?
3. இஸ்ரவேலர் யோசேப்பை எங்கு கொண்டு போனார்கள்?
4. யூதா தன் சகோதரரை விட்டு எந்த மனிதனிடம் போய் சேர்ந்தான்?
5. யார் செய்த காரியம் கர்த்தரின் பார்வைக்கு பொல்லாததாய் இருந்தது?
6. தாமார் யாருடைய மனைவி?
7. யூதா ஆடுகளுக்கு மயிர் கத்தரிக்க சென்ற இடம் எது?
8. மீறிப் பிறந்தவன் யார்?
9. பிறக்கும் முன் கையில் சிவப்பு நூல் கட்டபட்டவன் யார்?
10. தாமார் யூதாவின் பெற்ற அடையாளம் எது?
11. மூன்று கொடிகள் - மூன்று வெள்ளை கூடைகள் குறிப்பன எது?
12. பார்வோனின் பிரதானியும் தலையாரிகளுக்கு அதிபதியும் ஆக இருந்தவர் யார்?
13. எகிப்து ராஜாவுக்கு குற்றம் செய்தவர்கள் யார்?
14. சொப்பனத்துக்கு அர்த்தம் கூறுவது யாருக்கு உரியது?
15. யோசேப்பு கூறிய பஞ்ச வருஷங்கள் எத்தனை?
16. யோசேப்பு எகிப்து தேசத்தின் விளைச்சலில் எத்தனை பங்கு வாங்க கூறினான்?
17. யோசேப்பு எதை பெற்ற மனிதன்?
18. யோசேப்புக்கு பார்வோன் என்ன பெயரிட்டான்?
19. ஓன் பட்டினத்து ஆசாரியன் பெயர் என்ன?
20. யோசேப்பின் மனைவி யார்?
விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்:
நேற்றைய சரியான விடைகள்:
Quiz-205
1.யோசேப்பு
ஆதியாகமம் 30:25
2.நூற்றெண்பது வருஷம்
ஆதியாகமம் 35:28
3.சேயீர்மலை
ஆதியாகமம் 36:8
4.பஸ்மாத்
ஆதியாகமம் 36:10
5.ஆனாகு
ஆதியாகமம் 36:24
6.சில்பாள்--- பதினாறுபேர்
ஆதியாகமம் 46:18
பில்காள் ---ஏழுபேர். ஆதியாகமம் 46:25
7.பதினேழு
ஆதியாகமம்37:2
8.பலவருணமான அங்கியை
ஆதியாகமம் 37:3
9.சொப்பனக்காரன்
ஆதியாகமம் 37:19
10.இருபது வெள்ளிக்காசு
ஆதியாகமம் 37:28
விடைகளை நீங்களாகவே சுய மதிப்பீடு செய்து கொள்ளவும். நன்றி
Kindly Self evaluate your answers. Thank you.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
Comments
Post a Comment