கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
தவிர்க்க முடியாடத சில காரணங்களால் கடந்த 6 நாட்கள் வினா விடை பதிவிட முடியவில்லை ... அதற்காக மன்னித்து கொள்ளவும்.... இன்று 3 நாட்களுக்கான கேள்விகள் பதிவிடப்பட்டுள்ளன். அதேபோல் நாளை 3 நாட்களுக்கான கேள்விகள் பதிவிடப்படும். சிரமம் பார்க்காமல் விடைகளை பதிவிட்டு தொடர்ந்து ஒத்துழைப்பு தரும்படிகேட்டுக் கொள்கிறோம்.
பகுதி : முழு வேதாகமம்
1. கைககளின் சம்பாத்தியத்தினால் திராட்சை தோட்டத்தை நாட்டுகிறவள் யார்?
2. ஞான இருதயமுள்ள ஸ்திரீகள் ஆசரிப்புக் கூடாரத்தின் வேலைக்காக என்ன செய்தார்கள்?
3. இருதயங்களில் ஞான எழுப்புதல் அடைந்த ஸ்திரீகள் ஆசரிப்புக் கூடாரத்தின் வேலைக்காக என்ன செய்தார்கள்?
4. என் ஆண்டவரே என் தேவனே என்றது யார்?
5. என் தேவனே என் தேவனே என்றவர் யார்?
6. இயேசுவை தேவனிடத்திலிருந்து வந்த போதகரே என்றது யார்?
7. இயேசுவை தீர்க்கதரிசி என்றது யார்?
8. இயேசுவை நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றது யார்?
9. இயேசுவை வார்த்தை என்றது யார்?
10. இயேசுவை யூதருடைய ராஜா என்றது யார்?
11. இயேசுவை தேவ ஆட்டுக்குட்டி என்றது யார்?
12. இயேசுவை சமாதானத்தின் பிரபு என்றது யார்?
13. ஏசுவை வல்லமையுள்ள பிதயதா என்றது யார்?
14. நானே நல்ல மேய்ப்பன் என்றது யார்?
15. நானே வழியும் சத்தியமும் ஜீவனும் என்றது யார்?
16. இயேசுவை பிரதான மேய்ப்பர் என்றது யார்?
17. இயேசுவைப் பெரிய மேய்ப்பர் என்றது யார்?
18. நூற்றுக்கு அதிபதியாய் இருந்தவன் யார்?
19. யூதருக்குள்ளே அதிகாரியாக இருந்த பரிசேயன் யார்?
20. பாணபாத்திரகாரணாய் இருந்தவன் யார்?
21. தோல் பதனிடுகிறவனாய் இருந்தவன் யார்?
22. செம்பு செய்கிற கன்னானாயிருந்தவன் யார்?
23. தச்சனாய் இருந்தவன் யார்?
24. தாவீதை கண்டித்த தீர்க்கதரிசி யார்?
25. தாவீதுக்கு விரோதமாய் எழும்பின மகன் யார்?
26. தலைமயிர் யாருக்கு பாரமாய் இருந்தது?
27. நான் ஏன் ஆண்டவனுக்கு பாரமாய் இருக்க வேண்டியது என்ன என்றது யார்?
28. எதிரியின் கடிதத்தை கர்த்தரின் சன்னிதியில் விரித்த அரசன் யார்?
29. எதிரியின் ஆலோசனையை பைத்தியமாக்கிடுவீராக என்றது யார்?
30. தூதர்களின் அப்பம் எது?
விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்:
நேற்றைய சரியான விடைகள்:
விரைவில் பதிவிடப்படும்.
விடைகளை நீங்களாகவே சுய மதிப்பீடு செய்து கொள்ளவும். நன்றி
Kindly Self evaluate your answers. Thank you.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
Comments
Post a Comment