கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: +91 9791029324
பகுதி : முழு வேதாகமம்
1)அவரைக் காண்பேன், இப்பொழுது அல்ல; அவரைத் தரிசிப்பேன், சமீபமாய் அல்ல; ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும், ஒரு செங்கோல் இஸ்ரவேலிலிருந்து எழும்பும், அது மோவாபின் எல்லைகளை நொறுக்கி , சேத்புத்திரர் எல்லாரையும் நிர்மூலமாக்கும், என்று கூறியது_____.
2)எருசலேம் ____ மிதிக்கப்படும் என்று இயேசு கூறினார்.
3)மாறுபாடுள்ளவன் கர்த்தருக்கு அருவருப்பானவன்; நீதிமான்களோடே அவருடைய ____ இருக்கிறது.
4)மோசே______ வயதில் மரித்தார்.
5) ராஜாவின் வீட்டில் வாழும்படி அழைப்பு வந்தும் தன் முதிர்வயதினால் அதை நிராகரித்தவன்____.
நேற்றைய சரியான விடைகள்:
1)கிதியோன், பூரா (நியாயாதிபதிகள்.7:9 & 10)
2)சிமிர்னா சபை (வெளிப்படுத்தல்.2:10)
3)ஏசா (ஆதியாகமம்.27:38)
4) மேய்ப்பன்/ மந்தை மேய்க்கிறவன் (ஆமோஸ்.7:14)
5) தானியேல் (தானியேல்.9:25)
Comments
Post a Comment