கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
மீண்டும் ஒரு புதிய மாதத்தை காண கிருபை செய்த தேவனுக்கு தோத்திரம்.
மாதப்பிறப்பு வாக்குத்தத்தம்:
"உன் ஆயுசுநாட்களைப் பூரணப்படுத்துவேன்."- யாத்திராகமம் 23:26
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: +91 9791029324
இன்றைய கேள்விகள்:
பகுதி : முழு வேதாகமம்
1)நானும் உன் தாயாரும் உன் சகோதரரும் தரைமட்டும குனிந்து உன்னை வணங்க வருவோமா? என்று கேட்டவர்______________.
2)உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தவர்களுக்கும் தயவுசெய்கிற கர்த்தராலே அவன் ஆசீர்வதிக்கப்படுவானாக என்று கூறியது
______________________.
3)இயேசு கிறிஸ்துவால் குணமாக்கப்பட்ட பத்து குஷ்டரோகிகளில் அவருக்கு ஸ்தோத்திரம் செலுத்திய ஒரு குஷ்டரோகி எந்த நாட்டைச் சேர்ந்தவன்?
_______________________.
4) ஒரு மனிதன் தன்னுடைய மகாபலத்தின் இரகசியத்தை வெளிப்படுத்தும்படி 1100 வெள்ளிக்காசு கொடுக்கப்பட்ட ஸ்திரீ
______________________.
5)உலகத்தைக் கலக்குகிறவர்கள் இங்கேயும் வந்திருக்கிறார்கள் என்று __________________
பட்டணத்தில் சொல்லப்பட்டது.
நேற்றைய சரியான விடைகள்
1)எகிப்தியர் (யாத்திராகமம்.15:10)
2) பார்வோன் (ஆதியாகமம்.41:38)
3)300 பணத்துக்கு (மாற்று.14:5 / யோவான்.12:5)
4) ஓப்னி , பினெகாஸ் ( 1 சாமுவேல்.1:3)
5)நீதிமானுடைய (நீதிமொழிகள்.10:20)
Comments
Post a Comment