கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
விடைகளை இரவு 10 மணிக்கு முன் அனுப்பவும்.
விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: +91 9791029324
பகுதி : முழு வேதாகமம்
இன்றைய கேள்விகள்:
1)நெகேமியாவுக்கு பயமுண்டாகும்படி கடிதம் எழுதியவன் ________.
2மிருகங்களோடே சஞ்சரித்து மாடுகளைப் போல புல்லை மேய்ந்த அரசன் ________.
3)இழவு கொண்டாடுகிறவள் போல் நடித்து தாவீதை ஏமாற்றிய புத்தியுள்ள ஸ்திரீ யார்?
________.
4)சமாரியாவிலுள்ள ஒரு பட்டணத்திற்குப்போய் அங்குள்ளவர்களுக்குக் கிறிஸ்துவைக் குறித்துப் பிரசங்கித்தது யார்?
_________.
5)மகதலேனா மரியாளுக்குள்ளிருந்த எத்தனை பிசாசுகள் இயேசுவால் துரத்தப்பட்டன?
________.
நேற்றைய விடைகள்
1)இடிமுழக்கமக்கள் (மாற்கு.3:17)
2)தசமபாகத்திலும் காணிக்கையிலும் (மல்கியா.3:8)
3)தாகோனின் கோவிலில்
(1 சாமுவேல்.5:2)
4)நிக்கொதேமு (யோவான்.7:50)
5) கர்த்தருடைய பெரிதும் பிரகாசமுமான நாள் வருமுன்னே (அப்போஸ்தலர்.2:20)
Comments
Post a Comment