கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
விடைகளை இரவு 10 மணிக்கு முன் அனுப்பவும்.
விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: +91 9791029324
பகுதி : முழு வேதாகமம்
இன்றைய கேள்விகள்:
1) பரதேசி வீதியிலே இராத்தங்கினதில்லை. வழிப்போக்கனுக்கு என் வாசலைத் திறந்தேன் என்று சொன்னவர் _______.
2)பவுல் யாரை பிரியமான வைத்தியன் என்று அழைக்கிறார்?
_________.
3)ஆண்டவரே கேளும், ஆண்டவரே மன்னியும், ஆண்டவரே கவனியும் என்று கூறியது யார்?
________.
4)இந்தத் தேவன் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நம்முடைய தேவன் ; ________ நம்மை நடத்துவார்.
5) ஒரு வார்த்தை சொல்லும் அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான் என்று இயேசுவிடம் சொன்னது யார்?
_________.
நேற்றைய விடைகள்
1)தொபியா (நெகேமியா.6:19)
2)நேபுகாத்நேச்சார் (தானியேல்.4:33)
3)தெக்கோவா ஸ்திரீ
(2 சாமுவேல்.14:2-19)
4)பிலிப்பு (அப்போஸ்தலர்.8:5)
5)மகதலேனா மரியாள் (லூக்கா.8:2)
Comments
Post a Comment