கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
விடைகளை இரவு 10 மணிக்கு முன் அனுப்பவும்.
விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: 97910 29324
பகுதி : முழு வேதாகமம்
இன்றைய கேள்விகள்:
1)யாரை உபசரிக்க மறவாதிருக்க வேண்டும்?
_______________________.
2) இயேசு எங்கு இருந்தபோது கழுதையை தனக்கு அவிழ்த்து வரும்படி தன் சீஷர்களுக்கு கூறினார்?
________________________.
3)பவுலும் பர்னபாவும் பிரிந்து போகும்படியாக வாக்குவாதம் உண்டாவதற்குக் காரணம் யார்?
______________________.
4) தேவனுக்கு மகிமையைச் செலுத்தாததால் தேவதூதனால் அடிபட்டு புழுபுழுத்து செத்த அரசன் யார்?
_______________________.
5)தானியேலுக்கு இடப்பட்ட மறுபெயர் என்ன?
________________________.
நேற்றைய விடைகள்:
1)தோல் பதனிடுகிறவன் (அப்போஸ்தலர்.9:43 ; 10:6 ; 10:32)
2)அந்தியோகியாவில் (அப்போஸ்தலர்.11:26)
3)லேவி
(எண்ணாகமம்.1:47 ; 2:33)
4)உபாகமம்
(உபாகமம்.4:24)
5)நூன் (யோசுவா.1:1)
Comments
Post a Comment