கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!
அனைவருக்கும் தோத்திரங்களும் வாழ்த்துக்களும்.
இன்று "ஐம்பதாவது நாளை" நாம் எட்டியுள்ளோம். தொடர்ந்து இந்த 50 நாட்களும் நம்மோடு இருந்து நம்மை வழிநடத்திய கடவுளுக்கு கோடான கோடி தோத்திரம்.
இதிலே உற்சாகமாக தொடர்ந்து பங்கு பெற்று வருகின்ற ஒவ்வொருவருக்கும் இயேசுவின் நாமத்தினால் வாழ்த்துக்களும் தோத்திரங்களையும் தெரிவித்து கொள்கிறோம்.
முக்கியமான குறிப்புகள்:
*விடைகளை பதிவிடும் போது என்ன விடை என்பதை பதிவிட்டு அதனுடன் வசன ஆதாரத்தையும் பதிவிட வேண்டும்.
*வசன ஆதாரத்தை மட்டும் பதிவிட்டால் இனிமேல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* சரியான பதிலை நீங்கள் பதிவிட்டு இருந்தாலும் வசன ஆதாரம் இல்லாவிட்டால், அந்த பதில்கள் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
* அதேபோல் விடையின் முதல் வார்த்தையை போட்டு பிறகு...... என போட்டிருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. (எ:கா: தேசத்தில் ........ 41 : 30)
*மேலும் புகைப்படம் (PHOTO) எடுத்து அனுப்புவோர் தினமும் உங்கள் பெயர், ஊர், திருச்சபையின் முழு பெயரையும் குறிப்பிடவும்.
விடைகளை இரவு 10 மணிக்கு முன் அனுப்பவும்.
விடைகளை அனுப்ப வேண்டிய கைபேசி எண்: 97910 29324
பகுதி : முழு வேதாகமம்
இன்றைய கேள்விகள்:
1. புதுப்பட்டயத்தை அரையிலே கட்டியிருந்தவன் யார்?
2. நானும் என் தகப்பன் வீட்டாரும் பாவம் செய்தோம் என்றது யார்?
3. நானும் என் வீட்டாரும் கர்த்தரையே சேவிப்போம் என்றது யார்?
4. முகம் கழுவினது யார்?
5. கண்களைக் கழுவினது யார்?
நேற்றைய விடைகள்:
1)ஏலி
(1 சாமுவேல்.1:14)
2)இருதயங்களை
(2 தெசலோனிக்கேயர்.3:5)
3) யோசேப்பு (ஆதியாகமம்.39:23)
4)மோசே (யூதா.1:9)
5)எலியேசர் (ஆதியாகமம்.15:2)
Comments
Post a Comment